அறந்தாங்கி ரயில் நிலையத்தில் விரைவில் கணினி முன்பதிவு மையம் - திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் தகவல் அறந்தாங்கி வர்த்தக சங்கம் & அறந்தாங்கி கோட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில், திருச்சி ரெயில்வே கோட்ட பொது மேலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது
அதில், அறந்தாங்கி ரெயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க கணினி முன்பதிவு மையம் வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதற்கு கோட்ட மேலாளர் அறந்தாங்கியில் விரைவில் கணினி முன்பதிவு மையம் திறக்கப்படும் என்று கூறினார்.
இன்று 18.10.2023 அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பாக
திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர் உயர்திரு.அன்பழகன் ஐ ஆர் டி எஸ் அவர்களை திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நேரில் சந்தித்து அறந்தாங்கி மக்களின் முக்கிய ரயில் நிலைய கோரிக்கையான கணினி முன்பதிவு மையம் திறக்க அறந்தாங்கியில் நேரில் வழங்கிய கோரிக்கை மனுவிற்கு நினைவுட்டல் மனு வழங்கப்பட்டது.
அதற்கு பொது மேலாளர் அவர்கள் உங்களின் கோரிக்கை மனு மீது ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும் விரைவில் கணினி முன்பதிவு மையம் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
உடனடி நடவடிக்கையாக உரிய அலுவலரிடம் விரைந்து ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.
திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளருக்கு அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
விரைவில் அறந்தாங்கியில் கணினி முன்பதிவு மையம் செயல்பட உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.