தீபாவளிப் பண்டிகைக்கு புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.
சென்னையிலிருந்து புதுக்கோட்டை வழியாக ராமேசுவரத்துக்கு 2 தினசரி ரயில்கள், காரைக்குடிக்கு 1 தினசரி ரயில், செங்கோட்டைக்கு வாரத்தில் 3 நாட்கள் என ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஜூலை மாதம் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி துளிகளிலேயே சென்னையிலிருந்து புதுக்கோட்டை வழியாக இயங்கக் கூடிய அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் தீா்ந்தன.
தற்போது தீபாவளிக்கு முதல் 3 நாட்கள் (நவ. 9,10,11) சென்னையிலிருந்து புதுக்கோட்டை வழியாக இயங்கக் கூடிய அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் 200 கணக்கில் காத்திருப்புப் பட்டியலில் உள்ளன.
குறிப்பாக, சென்னையிலிருந்து ராமேசுவரத்துக்கு மாலை 5.45 மணிக்கு புறப்படும் சேது ரயில் மற்றும் செங்கோட்டைக்கு இரவு 8.20 மணிக்கு புறப்படும் சிலம்பு ரயில்களில் டிக்கெட்டுகள், காத்திருப்புப் பட்டியலில் கூட இல்லாமல்- முன்பதிவு செய்ய சாத்தியமில்லாத நிலைக்குச் சென்றுவிட்டன.
இதனால் எந்த ரயில்களிலும் டிக்கெட் உறுதியாகாத புதுக்கோட்டை மாவட்ட மக்கள் புதுக்கோட்டை வழித்தடத்தில் தெற்கு ரயில்வேயின் சிறப்பு ரயில்களின் அறிவிப்பை எதிா்நோக்கியுள்ளனா்.
கடந்த வாரம் ஆயுத பூஜை விடுமுறைக்கு யாரும் எதிா்பாராத வண்ணம் புதுக்கோட்டை வழியாக சென்னை சென்ட்ரல்- காரைக்குடி இடையே ஆயுத பூஜைசிறப்பு ரயில் ஒன்றை தெற்கு ரயில்வே இயக்கியது. அது புதுக்கோட்டை பயணிகள் பலருக்கும் பெரிதும் உதவியது.
மேலும், கடந்த ஆண்டு தீபாவளி விடுமுறைக்கு புதுக்கோட்டை வழித்தடத்தில் தாம்பரம்- திருநெல்வேலி- சென்னை எழும்பூா், நாகா்கோவில்-தாம்பரம் (ஒரு வழி ரயில்), கொச்சுவேலி- தாம்பரம்- கொச்சுவேலி ஹம்சபாா் உள்ளிட்ட போதுமான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
அதுபோல நிகழாண்டும் புதுக்கோட்டை பயணிகள் நலன் கருதி திருநெல்வேலி- தாம்பரம், கொச்சுவேலி- தாம்பரம், ஆயுத பூஜைக்கு இயக்கப்பட்ட சென்னை சென்ட்ரல்- காரைக்குடி உள்ளிட்ட ரயில்களை புதுக்கோட்டை வழியாக இயக்க வேண்டும் என்றும், கடைசி நேர பரபரப்பை தவிா்க்கும் வகையில், சிறப்பு ரயில் அறிவிப்பை வண்டி புறப்படுவதற்கு 4 அல்லது 5 நாட்கள் முன்பாக அறிவிக்க வேண்டும் என்றும் புதுக்கோட்டை பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.
புதுக்கோட்டையைச் சோ்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்கள் இதற்கான கோரிக்கையை மத்திய ரயில்வே துறைக்கு முன்வைத்து பெற்றுத் தர வேண்டும் என்றும் அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.