ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு 6 முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது




புதுக்கோட்டையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு வருகிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடக்கிறது.

ஊர்க்காவல் படை

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை தலைவராக கொண்டு செயல்படும் ஊர்க்காவல் படையில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. தன்னார்வ தொண்டு உள்ளம் படைத்த ஆண், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வருகிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 5 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. தகுதியுடையவர்கள் கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் அலுவலகத்திற்கு வர வேண்டும்.

வயது வரம்பு

ஊர்க்காவல் படையில் சேர 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 வயதுக்கு குறையாமலும், 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உடற்தகுதி காவல் துறை போன்றது. தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். குற்ற வழக்குகள் மற்றும் அரசியல் கட்சிகளில் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கக்கூடாது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ள பணிகளுக்கு இடையூறு இன்றி செயல்படலாம்.

இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் இல்லை. பணி நாட்களுக்கு உரிய படித்தொகை மட்டும் பெற்றுத்தரப்படும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments