ஊர்க்காவல் படை
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை தலைவராக கொண்டு செயல்படும் ஊர்க்காவல் படையில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. தன்னார்வ தொண்டு உள்ளம் படைத்த ஆண், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வருகிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 5 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. தகுதியுடையவர்கள் கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் அலுவலகத்திற்கு வர வேண்டும்.
வயது வரம்பு
ஊர்க்காவல் படையில் சேர 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 வயதுக்கு குறையாமலும், 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உடற்தகுதி காவல் துறை போன்றது. தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். குற்ற வழக்குகள் மற்றும் அரசியல் கட்சிகளில் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கக்கூடாது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ள பணிகளுக்கு இடையூறு இன்றி செயல்படலாம்.
இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் இல்லை. பணி நாட்களுக்கு உரிய படித்தொகை மட்டும் பெற்றுத்தரப்படும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.