சென்னை எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே 4-வது பாதை திட்டம்| பணிகள் தீவிரம்




சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே தற்போது 2 பாதையில் புறநகர் ரயில்களும், ஒருபாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரயில்பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே, எழும்பூர்-கடற்கரை வரை 4-வது பாதை அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை கோரிக்கையை ஏற்று, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே ரூ. 280 கோடி மதிப்பில் 4-வது புதிய பாதை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதற்காக, நடப்பு பட்ஜெட்டில்ரூ. 96. 70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வதுபாதைக்கான பணி கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கியது. முதல்கட்டமாக, கோட்டை, பூங்காநகர் ஆகிய ரயில் நிலையங்களில் செடிகள், பழைய தண்டவாளங்கள் என தேவையற்ற பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து, ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றது. இப்போது, இந்த பணிகள் தீவிரமடைந்துள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments