அதிராம்பட்டினத்தில் நகராட்சியுடன் மூன்று கிராமங்களை இணைப்பதற்கு அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு மனு




தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் கூட நிறைவேறாத நிலையில் கூடுதலாக ஏரிப்புறக்கரை, நரசிங்கபுரம், மழவேனிற்காடுஆகிய கிராமங்களை அதிராம்பட்டினம் நகராட்சி பகுதியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிராம்பட்டினத்தில் வசிக்கும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பினர் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், "அதிராம்பட்டினம் கடந்த 17.12.2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள்கூட முழுமையாக முடியவில்லை. இந்நிலையில் நகரில் பெரும்பாலான பகுதிகளில் கழிவுநீர், மழைநீர் வடிகால்கள் மற்றும் சாலை வசதிகள் முழுவதும் நிறைவு பெறாத நிலை இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி அதிராம்பட்டினம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் போர்டு அமைந்து அதன் பதவிக்காலம் முழுமையாக இன்னும் முடியவில்லை. மேலும் இன்று நடைபெற உள்ள நகராட்சி மன்றம் உறுப்பினர்கள் கூட்டத்தில் பொருள் 39-ல் குறிப்பிட்டுள்ள நமதூர் அருகாமையில் உள்ள 3 கிராமங்களை அதிரை நகராட்சியில் இணைப்பது சம்மந்தமாக விவாதிக்க இருப்பதாக அறிகிறோம். அப்படியாயின் தற்போது நமதூரின் தேவைகள் முழுமையடையாமல் இருப்பதாலும், அதிரை நகராட்சியின் தற்போதுள்ள எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்துவரும் மக்கள் தொகை மற்றும் வருவாய்களும் போதுமானது என, அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு நிர்வாகம் கருதுகிறது.

எனவே தற்போது மேற்படி பொருள் 39-ல் உள்ள அதிரை அருகாமை கிராமங்களான 3) மழவேனிற்காடு 31 ஏரிப்புறக்கரை 31 நரிக்சீரம் ஆகிய ஊராட்சிகளை அதிராம்பட்டினம் நகராட்சியில் இணைக்கும் தீர்மானத்தை தற்போது கைவிடுமாறு அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments