அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலை
அதிராம்பட்டினத்தில் இருந்து முத்துப்பேட்டைக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் ஆர்ச் அருகே சாலையையொட்டி, பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் தடுப்பு சுவர், சில மாதங்களுக்கு முன், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த தடுப்பு சுவர் இதுவரை சீரமைக்கப் படவில்லை.
விபத்துகள்
கிழக்கு கடற்கரை சாலையில் ராமேஸ்வரம், தூத்துக்குடி, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், காரைக்கால், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல இரவு பகல் என எந்த நேரமும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரா வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் மாடுகள் குறுக்கே நிற்பதாலும் வெளிச்சம் இல்லாததாலும் இந்த பகுதியில் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
சீரமைக்க வேண்டும்
தடுப்பு சுவரை சீரமைத்தால், விபத்துகள் தவிர்க்கப்படும். இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் கூலி தொழிலாளர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் விபத்து அச்சத்தில் தவிக்கும் நிலை உள்ளது. எனவே இ்டிந்து விழுந்த தடுப்பு சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.