கொத்தமங்கலம் அரசு பள்ளி கட்டிடங்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அரசு பள்ளி
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் ஏராளமானவர்கள் டாக்டர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த அரசு பள்ளி கட்டிடங்கள் பல வருடங்களாக வர்ணம் தீட்டப்படாமலும், ஜன்னல் கம்பிகள், கதவுகள் உடைந்தும் காணப்பட்டது. இதனை மாற்றி சீரமைக்க பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்த தொடங்கி உள்ளனர்.
புதியவா்ணம்
முன்னாள் மாணவர்கள் வாட்ஸ்-அப் குழு மூலம் இணைந்து முதலில் பள்ளி கட்டிடங்கள் சுத்தம் செய்யப்பட்டு உடைந்த பகுதிகளை சீரமைத்து அனைத்து கட்டிடங்களுக்கும் புதிய வர்ணம் தீட்டியதுடன் நவீன வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிகளுக்காக முன்னாள் மாணவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் முன்னாள் மாணவர்களின் ஆர்வமான பணிகளை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் தங்கள் செலவில் பள்ளி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்துள்ளனர். தொடர்ந்து சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்று வரும் அரசு பள்ளியை அனைவரும் பார்த்து பொதுமக்கள் பாராட்டி செல்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.