சென்னை பயண தூரத்தை குறைக்க தஞ்சை-அரியலூர் இடையே புதிய ரெயில் வழித்தடம் அமைக்க வேண்டும் ரெயில்வே பயணிகள் சங்கத்தினர், கோட்ட மேலாளரிடம் மனு




காவிரி டெல்டா ரெயில்வே பயணிகள் சங்கத்தின் தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார், துணைச்செயலாளர் கண்ணன், சோளகம்பட்டி ஊராட்சி தலைவர் மேனகா முத்துசாமி ஆகியோர் தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது

தஞ்சை-சென்னை இடையே ரெயில் பயண தூரத்தை குறைக்கும் வகையில் தஞ்சையை அடுத்த திட்டை கிராமத்தில் இருந்து அரியலூருக்கு சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்க வேண்டும். திருச்சி-தஞ்சை-வேளாங்கண்ணி-காரைக்கால் மார்க்கத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்க வேண்டும். காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயிலை தஞ்சையில் மாலை 5.50 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை முன்புபோலவே திருச்சியில் காலை 7.35 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலை வேளாங்கண்ணி வரை இயக்க வேண்டும். தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் புதிதாக அதிவிரைவு ரெயில் இயக்க வேண்டும். திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை பூதலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments