காவிரி டெல்டா ரெயில்வே பயணிகள் சங்கத்தின் தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார், துணைச்செயலாளர் கண்ணன், சோளகம்பட்டி ஊராட்சி தலைவர் மேனகா முத்துசாமி ஆகியோர் தென்னக ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது
தஞ்சை-சென்னை இடையே ரெயில் பயண தூரத்தை குறைக்கும் வகையில் தஞ்சையை அடுத்த திட்டை கிராமத்தில் இருந்து அரியலூருக்கு சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்க வேண்டும். திருச்சி-தஞ்சை-வேளாங்கண்ணி-காரைக்கால் மார்க்கத்தில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்க வேண்டும். காரைக்கால்-திருச்சி பயணிகள் ரெயிலை தஞ்சையில் மாலை 5.50 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.
திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை முன்புபோலவே திருச்சியில் காலை 7.35 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். திருச்சி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலை வேளாங்கண்ணி வரை இயக்க வேண்டும். தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் புதிதாக அதிவிரைவு ரெயில் இயக்க வேண்டும். திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை பூதலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.