காரசாரமான கடல் உணவு, காட்டுக்கு நடுவே படகு பயணம்: கவர்ந்திழுக்கும் காரங்காடு... எங்க இருக்குனு தெரியுமா?




அமைதியான கடற்கரையில் கால்களை தொட்டு சென்று ஓடும் நுரை பொங்கும் அலைகள் என்றும் மகிழ்ச்சியை தரும். அழகிய கடல் மட்டுமில்லாமல், அங்கே ஒரு சதுப்பு நிலக் காடுகளும், அதில் படகு பயணமும், பறவைகளையும், கடலுக்குள் இருக்கும் உயிரினங்களையும் பார்த்தால் எப்படி இருக்கும்? அது மட்டுமா, கடற்கரை கிராமத்தின் கை பக்குவத்தில் மீன், நண்டு அடங்கிய கடல் சாப்பாட்டையும் ருசிக்கலாம். இப்படி ஒரு இடம் பற்றி தெரிந்து கொள்வோமா...?

காரசாரமான கடல் உணவு, காட்டுக்கு நடுவே படகு பயணம்: கவர்ந்திழுக்கும் காரங்காடு... எங்க இருக்குனு தெரியுமா?

சென்னைக்கு அருகேயுள்ள முட்டுக்காடு, கடலூர் பிச்சாவரம், திருவாரூர் முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடுகளை பற்றி நாம் அறிந்து இருப்போம். இவற்றிற்கு இணையானதாக ராமநாதபுரத்தில் உள்ள காரங்காடு உள்ளது.


காரங்காடு கடற்கரை
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே அமைந்துள்ள எழில் கொஞ்சும் காரங்காடு கடற்கரை, சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கியுள்ளது. தொண்டி செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 42 கி.மீ தூரத்தில் காரங்காடு உள்ளது. கடற்கரையை சுற்றிலும் சதுப்பு நிலக் காடுகள் இயற்கையாகவே அமைந்து இருக்கிறது. இவை இருபுறமும் வளர்ந்து கண்களுக்கு விருந்தளிக்கிறது.


சதுப்பு நிலக் காட்டுக்குள் பயணம்

இதன் அழகை ரசிக்க படகு பயணம் இருக்கிறது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அமையும் இந்தப் பயணத்தில் பல ஆச்சரியத்தை நீங்கள் கண்டு களிக்கலாம். படகு சவாரிக்கு ரூபாய் 200 கட்டணமாக பெறப்படுகிறது. படகில் செல்லும் போது நமது பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. இந்த சூழல் சுற்றுலா தலத்தில் துடுப்பு படகு சவாரி, நீருக்கு அடியில் உள்ள அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்களை காண்பது போன்ற வசதிகளும் உள்ளன.

பற... பற...

இங்கு ஏராளமான பறவைகள் வலசை வருவதால் பறவை ஆர்வலர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களின் சொர்க்க பூமியாக உள்ளது. மஞ்சள் மூக்கு நாரை, கடல் புறா, செந்நாரை, பவளக்காலி, நீர் காகம், பிளமிங்கோ, கூழைக்கடா உள்ளிட்ட பல பறவைகள் உணவு தேடி பறக்கும் காட்சிகளை காண முடியும்.


மொத்தம் அழகும் ஒற்றைக் காட்சியில்

அழகு கொஞ்சும் சதுப்பு நிலக்காட்டின் பரந்து விரிந்த அழகை காணும் வகையில், கடல் பசு என்ற தீவு பகுதியில் ஓய்யாரமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் காட்சி கோபுரத்தில் நின்று கொண்டு கடலை சுற்றுலா பயணிகள் ரசிக்க மடியும்.


கடலுக்குள் ஒரு சாகசம்

மேலும் காரங்காடு கடல் பகுதியில் கடல் பசு, கடல் குதிரை, கடல் பாசி, வண்ண மீன்கள், நட்சத்திர மீன்கள், கடற்புற்கள், கடல் தாவரங்கள் உள்ளிட்ட ஏராளமான கடல்சார் வன உயிரினங்கள் வாழ்கின்றன. இதனை கடல் நீருக்குள் மூழ்கிய படி நம்மால் காண முடியும். "கடலுக்குள் மூழ்கி பார்ப்பதா" என்று சொன்ன உடன் பயப்பட வேண்டாம். இதற்காகவே பாதுகாப்பு கருவிகள், சுவாசிக்கும் கருவிகள், பிரத்தியேக கண்ணாடி போன்றவை தரப்படும்.

காரசாரமான கடல் உணவு

கடலுக்குள் போய்ட்டு வந்துவிட்டு, கடல் உணவுகளை சாப்பிட வேண்டாமா? அதற்காகவே பல வெரைட்டிகள் நமக்காக காத்திருக்கின்றன. அதுவும் கிராமத்து கை பக்குவத்தில் சுட சுட ஒரு புடி பிடிக்கலாம். மீன் குழம்பு, பொறித்த மீன் வகைகள், நண்டு சூப், நண்டு கிரேவி, இறால் வறுவல் நம் நாக்கை நிச்சயம் உச்சு கொட்ட வைக்கும். அனைத்தையும் முடிந்து பின்னர், காரங்காடு சுற்றுலாவை ரசித்த பின்னர் வீடு திரும்ப மனம் இருக்காது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments