அறந்தாங்கியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு




அறந்தாங்கியில் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நெம்மேலிக்காடு கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயம் நெம்மேலிக்காடுகிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து புறங்காடு கிராமம் வரை எல்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன.

பரிசு

இதில் 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் நடுமாடு பிரிவில் 9 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு எல்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் ரூ.68 ஆயிரமும் வழங்கப்பட்டது. கரிச்சான் மாடு பிரிவில் 15 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், ரூ.38 ஆயிரமும் வழங்கப்பட்டது. மாட்டு வண்டிகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிக்கு கொடிபரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இரு புறங்களிலும் ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டு இருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். அறந்தாங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments