கடைவீதி
புதுக்கோட்டையின் முக்கிய கடைவீதி பகுதியாக கீழ ராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதியும் உள்ளது. குறிப்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கீழ ராஜ வீதியின் இரண்டு பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான நடைபாதை கடைகள் தற்காலிகமாக ஜவுளிக்கடை, காலணி கடை வரை அனைத்து வித பொருட்களுக்கும் கடைகள் போட்டு வியாபாரிகள் விற்பனை செய்தனர். தீபாவளி முடிந்த நிலையில் சாலையில் அட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் சாலைகள் தெரியாத அளவிற்கு கொட்டிக்கிடந்தன. மேலும் நகரின் குடியிருப்பு பகுதிகளிலும் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட குப்பைகளும் அதிக அளவில் இருந்தன. இதனால் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு குப்பைகள் சேர்ந்தன.
140 டன் குப்பைகள் அகற்றம்
இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சியின் தூய்மை பணியாளர்கள் நேற்று காலையில் இருந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் தூய்மை பணியாளர்கள் 250 பேரும், நகராட்சி தூய்மை பணியாளர்கள் 150 பேரும் என 400 தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் பொதுவாக நாள் ஒன்றுக்கு சுமார் 40-ல் இருந்து 50 டன் குப்பைகள் அள்ளப்படும். ஆனால் நேற்று மட்டும் 140 டன் குப்பைகள் அள்ளப்பட்டது.
சரக்கு வேன், லாரிகளில் குப்பைகளை ஏற்றி அகற்றப்பட்டது. குப்பைகள் அகற்றும் பணிகளை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், துணைத்தலைவர் லியாகத்அலி உள்பட நகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.