தொண்டியில் கடல் நீர் மட்டம் உயர்வு: மீனவர்கள் பாதிப்பு




தொண்டியில் வழக்கத்திற்காக கடல் நீர் மட்டம் உயர்ந்த காரணத்தினால் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்த்துள்ளனர்.

தொண்டி கடல் எப்போதும் அமைதியாக காணப்படும். நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது. வங்க கடலில் தென்மேற்கில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுதால் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.

இது குறித்து மகாசக்திபுரம் மீனவர்கள் கூறுகையில், தொண்டி ஜெட்டி பாலத்தின் அடிப்பகுதியில் கடல் நீர் தரைமட்டத்தில் காணப்படும்.

நேற்று வழக்கத்திற்கு மாறாக நீர் மட்டம் ஜெட்டி பாலம் வரை உயர்ந்து காணப்பட்டது. அலையும் அதிகமாக இருந்தது என்றனர்.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பால் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments