ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உணவு திருவிழா




ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உணவு திருவிழா நடைபெற்றது. உணவு திருவிழாவை ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி தொடங்கி வைத்தார். உணவு திருவிழாவில் மகளிர் சுயஉதவி குழுவினர் சிறுதானிய உணவுகளை செய்து கொண்டு வந்து பார்வைக்கு வைத்தனர். பின்னர் அவற்றை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையர் சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். உணவு திருவிழாவில் செய்யப்பட்ட உணவுகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகள், ரத்தசோகை குறைபாடு உள்ளவர்களுக்கு கொடுக்க செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments