பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட கடல்தொழிலாளர் சங்கம் (சிஐடியூ)புதுக்கோட்டை மாவட்டக்குழுவின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு




புதுக்கோட்டை மாவட்ட கடல்தொழிலாளர் சங்கம் (சிஐடியூ)புதுக்கோட்டை மாவட்டக்குழுவின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மீனவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை விவாதித்திட கடலோர கிராமங்களை ஒருங்கிணைத்து மீனவர் பகுதியிலேயே மீனவர் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த வேண்டும் மீன்வளம் பவளப்பாறைகள் கடல் வாழ் தாவரங்கள் மற்றும் மீன் மறு உற்பத்தியை பாதிக்க கூடிய அறிவலையை பயன்பாட்டை முற்றாக ஒழித்து மீன் வளத்தையும் இதனால் பாதிக்க கூடிய நாட்டு படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வழியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் 20.11.2023 அன்று மனு அளிக்கப்பட்டது இதில் சிஐடியூ மாவட்ட துணை தலைவர் சி.அன்புமணவாளன்மீனவர் சங்க மாவட்ட செயலாளர் கரு ராமனாதன் மாவட்ட தலைவர் கோ.வெங்கடேசன் துணை செயலாளர் முகமது கனி புதுகை ஒருங்கிணைப்பாளர் M.மாரிமுத்து வழக்கறிஞர் M. கௌரிசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments