ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் மீனவர்கள் கிராமமான ஆற்றாங்கரையில் வசித்து வரும் ஏராளமான இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் மிகவும் ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து பரிசுகளையும் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இந்த இளைஞர்களுக்கு ஆற்றாங்கரை கிராமத்தில் அதற்கான விளையாட்டு மைதானம் இல்லாமல் நீண்ட காலமாக மணலில் விளையாடி வருகின்றனர். ஆற்றாங்கரை இஸ்லாமிய வாலிபர் சங்க நிர்வாகிகள் புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக ஒரு தனி குழு அமைத்து அதற்கான நிதிகளை திரட்டி வருகின்றனர். இந்தநிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி.யை நேரடியாக சந்தித்து புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக நிதி வழங்கி உதவிட கோரிக்கை வைத்தனர். இவர்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றும் வகையில் ஆற்றாங்கரை விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் அளவில் அவரது சொந்த நிதியில் விளையாட்டு மைதானம் அமைத்திட ரூ.1 லட்சம் காசோலையை இஸ்லாமிய வாலிபர் சங்க நிர்வாகிகளிடம் வழங்கினாா். இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனிக்கு வாலிபர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.