மணமேல்குடி ஒன்றியத்தில் கிராமாலயாவின் சார்பாக ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சுகாதார பயிற்சி




புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும் கிராமாலயா இணைந்து நடத்தும் சுகாதாரப் பயிற்சியினை மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர்  இந்திராணி  அவர்களின் தலைமையில் தொடங்கியது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு  சிவயோகம் முன்னிலை வகித்தார்.

இப்ப பயிற்சியில் கிராமாலயா தலைமை அலுவலர்  இளங்கோவன்  அனைவரையும் வரவேற்று பேசினார். 

இப்பயிற்சியில்
 தன் சுத்தம், சுகாதாரமான கழிப்பறை, சுகாதாரமான குடிநீர், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வை பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்ப பயிற்சியில்
உமா மகேஸ்வரன் மற்றும் கிராமாலயா புதுக்கோட்டை சுகாதார பணியாளர்கள் சத்யா  மற்றும் மரியா  ஆகியோர்  கருத்தாளர்களாக செயல்பட்டனர். இப்பயிற்சியில் 27 பெண் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments