கரும்பு விவசாயம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தா்வகோட்டை, ஆலங்குடி, புதுக்கோட்டை தாலுகா பகுதிகளில் கரும்பு விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பு விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இந்த கரும்புகள் அனைத்தும் சர்க்கரை ஆலைகளுக்கு விற்கப்படுகிறது. அங்கு கரும்பில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் கரும்புகள் அனைத்தும் தஞ்சாவூர் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அரசு சார்பில் வழங்கப்படுவது உண்டு. இதில் 2022-2023-ம் ஆண்டில் கரும்பு அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் ஊக்கத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் ஊக்கத்தொகை வழங்க கோரி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஊக்கத்தொகை
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், "கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,811 மத்திய அரசு கொள்முதல் விலை நிர்ணயித்துள்ளது. அந்த விலையில் விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை சர்க்கரை ஆலை கொள்முதல் செய்தது. கரும்பு உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதில் டன் ஒன்றுக்கு ஊக்கத்தொகை ரூ.195 வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படாமல் உள்ளது'' என்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.1 கோடியே 46 லட்சம் வழங்கப்பட உள்ளது. ஊக்கத்தொகை வழங்குவதற்கான கோப்புகளில் உயர் அதிகாரிகள் கையெழுத்திட்டு விட்டனர். விரைவில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.