கோட்டைப்பட்டினம் அருகே தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி நண்பர்கள் காயம்




கோட்டைப்பட்டினம் அருகே தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். நண்பர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

நண்பர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் லட்சுமணன் (வயது 24). இவரது நண்பர்கள் தங்கதுரை மகன் மணிகண்டன் (27), கீழ மஞ்சக்குடி பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் மணிகண்டன் (30).

இவர்கள் 3 பேரும், மோட்டார் சைக்கிளில் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள ரெட்டையாளம் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விஜயகுமார் மகன் மணிகண்டன் (30) ஓட்டினார்.

வாலிபர் பலி

விருதுவயல் வளைவு ரோடு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பியில் மோதியது.

இதில் படுகாயமடைந்த விஜயகுமார் மகன் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லட்சுமணன், தங்கதுரை மகன் மணிகண்டன் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர்.

வழக்கு

இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments