அறந்தாங்கியில் வர்த்தக சங்கம் சார்பில் ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு கூட்டம்




அறந்தாங்கியில் வர்த்தக சங்கம் சார்பில், வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு கூட்டம் பேராவூரணி சாலையில் உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அறந்தாங்கி வர்த்தக சங்க தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். அறந்தாங்கி வர்த்தக சங்க செயலாளர் தவசுமணி வரவேற்றார். முன்னாள் வர்த்தக சங்க தலைவர்கள் ராஜ்குமார், ஆதி.ரவீந்திர குமார், என்.சந்திர மோகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். கூட்டத்தில் சென்னையை சேர்ந்த ஆடிட்டர் ஆர்.சுப்பிரமணியன் பேசுகையில், வணிகர்களுக்கு எளிமையாகவும், தெளிவாகவும் ஜி.எஸ்.டி. வரி குறித்து சிறந்த முறையில் விளக்கம் அளித்து பேசினார். மேலும் ஜி.எஸ்.டி. குறித்த வணிகர்களின் சந்தேகங்களுக்கு கேள்வி பதில் முறையில் விளக்கம் அளித்தார். இதில் அறந்தாங்கி வர்த்தக சங்க நிர்வாகிகள், அறந்தாங்கி கோட்டத்தை சேர்ந்த வணிகர் சங்கங்களின் வணிகர்கள், அறந்தாங்கி வர்த்தக நிறுவனங்களின் வணிகர்கள், பட்டய கணக்காளர்கள், கணக்காளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வர்த்தக சங்க பொருளாளர் எஸ்.சேக்.அப்துல்லா நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments