கண்காட்சி
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சிறுதானிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இக்கண்காட்சியில் சிறுதானிய உணவின் நன்மைகள், பலன்கள் குறித்த விவரங்களுடன் சிறிதானிய உணவுகளை தயார் செய்து உரிய குறிப்புகளுடன் காட்சிப்படுத்தியிருந்தனர். இதில் கேழ்வரகு, தினை, சாமை, கம்பு, கவுனி அரிசி உள்பட சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள், கஞ்சிகள், பாரம்பரியமான உணவுகள் வைக்கப்பட்டிருந்தன.
பள்ளி மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், அங்கன்வாடி பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உணவுகளை தயாரித்து கொண்டு வந்திருந்தன. இந்த கண்காட்சியை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் தின்பண்டங்கள், உணவுகளை ருசி பார்த்தார். தயாரிப்பு முறைகளையும் அவர் கேட்டறிந்தார்.
களைகட்டியது
பாரம்பரியமான உணவுகள் மற்றும் தின்பண்டங்களை பார்வையிட மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் கண்காட்சி களை கட்டியது. கண்காட்சியில் இடம்பெற்றிருந்த உணவுகள், தின்பண்டங்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டன. இதனை அனைவரும் வாங்கி ஆர்வமுடன் சாப்பிட்டனர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய கண்காட்சியில் பகல் 12 மணி அளவில் அனைத்து தின்பண்டங்களும் காலியாகிவிட்டன. கண்காட்சியில் சிறந்த அரங்குகளில் முதல் இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அதிகாரி புவனேஸ்வரி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.