தஞ்சாவூர் மாவட்டம் ல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இரவு நேரங்களில் மாடுகள் ஜாலியாக உலா வருவதோடு சாலையின் நடுவே ஓய்வெடுக்கவும் செய்கின்றன.
பொதுவாக இரவு நேரங்களில் சாலைகளில் அதிகமான மாடுகள் அமர்ந்திருப்பதாலும், குறுக்கே ஒடுவதாலும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றது. மேலும் இதனால் அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுகிறது.
எனவே சரேபந்திரராஜன்பட்டினம் ஊராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தஞ்சை மாவட்டத்தில் தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி தொடக்கம் வரை சுமார் 40 கிலோ மீட்டர் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
கன்னியாகுமரி முதல் சென்னை வரை செல்லும் முக்கிய சாலையான இந்த கிழக்கு கடற்கரை சாலையில், தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி வரை முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் என முக்கியமான ஊர்களும் அமைந்துள்ளது.மேலும், ராமேஸ்வரம், ராமநாதபுரம், நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் கார்களிலும், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு உரம், மீன், கருவாடு உள்ளிட்ட வியாபார பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன.
மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில், தினசரி அதிகமான கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிகின்றன. இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும்
எனவே, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.