போராட்டம்
ஆவுடையார்கோவிலில் இருந்து குளத்துக்குடியிருப்பு, பெருநாவலூர் வழியாக வீரமங்கலம், அப்பளை வழியாக புதுவயல்-காரைக்குடி வரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையில் எந்த வாகனமும் செல்லமுடியாத சூழ்நிலையில் உள்ளது. இந்த சாலை நெடுஞ்சாலைத்துறையில் கிராம சாலைகள் திட்டத்தில் சேர்த்து நீண்ட நாட்கள் ஆகியும் சாலை சரிசெய்யப்படாமல் உள்ளது. இதையடுத்து சாலையை சீரமைக்க கோரி குளத்துக்குடியிருப்பு, பெருநாவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காகித கப்பல் விட்டு...
அப்போது விரைவில் சாலை சரிசெய்து தரப்படும் என்று போராட்டக்காரர்களிடம் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் இதுநாள் வரை அந்த சாலை சீரமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், தற்போது பெய்த மழையால் குளமாக மாறிய சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி இருக்கும் தண்ணீரில் குளத்துக்குடியிருப்பை சேர்ந்த சிறுவர்கள் காகிதத்தில் கப்பல் செய்து விட்டு விளையாடி வருகின்றனர்.
எனவே உடனடியாக அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.