மாணவி சாவு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் கன்சிஹா (வயது 11). இவர் ஆவணத்தான்கோட்டை தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு மர்ம காய்ச்சல் இருந்ததால் சிகிச்சைக்காக அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கன்சிஹா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
7-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை
இதைபோல் இப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7-க்கும் மேற்பட்டோர் மதுரை, திருச்சி என தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூறுகையில், டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து நோய் தொற்றை தடுக்கக்கூடிய எந்த நடவடிக்கையும் இதுவரை சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறையோ எடுக்கவில்லை என்று கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.