மிக்ஜம் புயல் காரணமாக தொண்டி பகுதியில் கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கசெல்லவில்லை. நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று அதிகாலை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்று வலைகளை விரித்து வைத்துவிட்டு வந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏற்கனவே விரித்து வைத்திருந்த வலைகளை எடுத்து பார்த்தபோது அதில் அதிக அளவில் நண்டு கிடைத்திருந்தது.
உடனே அவற்றை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் தொண்டி மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு சென்றனர். தொண்டி பகுதியில் பல ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் பிடித்து வரப்பட்ட நண்டு அதிக அளவில் விற்பனைக்கு வந்ததால் வழக்கத்தைவிட நேற்று குறைவான விலைக்கு நண்டு விற்பனையானது.
புயலுக்கு முன்பு ரூ. 450 வரை விற்பனையான நண்டு நேற்று ரூ.300 முதல் பெரிய ரக நண்டுகள் ரூ.400 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் குறைந்த விலைக்கு நண்டு வாங்கி சென்றனர். மீன் வரத்து குறைவாக இருந்த போதிலும் இறால் அதிக அளவில் வரத்து இருந்தது.
இதனால் இறால் நேற்று குறைவான விலைக்கு விற்பனையானது. விலை குறைவால் தொண்டி மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் மற்றும் நண்டுகள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.