பாம்பன் கடலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. ரூ.545 கோடியில் நடைபெற்று வரும் இந்த பணிகளில் ஒரு பகுதியில் முழுமையாக பணிகள் முடிவடைந்துவிட்டன. மற்றொரு பகுதியில் தூண்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. மையப்பகுதியில் தூக்குப்பலத்தை பொருத்துவதற்கான பணிகள் நடைபெறுவதற்காக அந்த தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி நடைபெறாமல் உள்ளது. மையப்பகுதியில் அமைய உள்ள தூக்குப்பாலம் புதிய ரெயில் பாலத்தின் நுழைவுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தூண்கள் மீது நிறுத்தப்பட்டு இரும்பு கம்பிகளை வெல்டிங் செய்யும் பணி கடந்த 3 மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. வருகின்ற ஜனவரி மாதத்தில் தூக்குப்பாலம் தூண்கள் வழியாக நகரும் கிரேன் மூலம் மையப்பகுதிக்கு கொண்டு சென்று பொருத்தப்பட உள்ளது.
இதுகுறித்து ஆர்.வி.என்.எல். உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் நிறுவப்பட உள்ள தூக்குப்பாலம் 70 மீட்டர் நீளமும், 600 டன் எடையும் கொண்டதாகும். புதிய தூக்குப்பாலம் நுழைவுப்பகுதியில் வைத்து வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதில் தற்போது வெல்டிங் செய்யும் பணி நடந்து வருகிறது. ஜனவரி மாதத்தில் தூக்குப்பாலத்தை தூண்கள் வழியாகவே நகரும் கிரேன் மூலம் நகர்த்தி மையப்பகுதியில் அமைக்கப்பட்டு பொருத்தப்பட உள்ளது. தற்போது மைய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தூணில் நான்கு இணைப்புகளுடன் கூடிய 40 மீட்டர் உயரத்தில் டவர் அமைக்கும் பணி முடிந்துவிட்டது. மற்றொரு தூணில் டவர் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.