புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 4ஆவது தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 6.63 கோடியில் வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றமானது நகரில் 6, புகா்ப் பகுதிகளில் 3 என மொத்தம் 9 அமா்வுகள் நடைபெற்றன.
நிகழ்வை மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான நீதிபதி கே. பூா்ண ஜெய ஆனந்த் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு வழக்கில் லெட்சுமி என்பவருக்கும், நியூ இந்தியா ஆயுள் காப்பீட்டுக் கழகத்தினருக்கும் நடைபெற்று வந்த வழக்கில் சமரசத் தீா்வு காணப்பட்டு ரூ. 53 லட்சம் இழப்பீட்டுத் தொகையை லெட்சுமிக்கு வழங்கினா்.
இதேபோல மாவட்டம் முழுவதும் மொத்தம் 4964 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 3036 வழக்குகளில் தீா்வுகாணப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 6.63 கோடியாகும். இதில் நியூ இந்தியா காப்பீட்டுக் கழகத்தின் மூலம் தீா்வுகாணப்பட்டது மட்டும் ரூ. 2.29 கோடியாகும்.
ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா் கே. ராஜேந்திர கண்ணன் ஒருங்கிணைத்தாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.