பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு தினசரி ரெயில் பயணிகள் கோரிக்கை




பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி, காரைக்குடி புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு தினசரி ரெயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






திருவாரூர்-காரைக்குடி வழித்தடம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி கிராம மக்கள் போக்குவரத்துக்கு பெரும்பாலும் பஸ்களை நம்பி உள்ளனர். திருவாரூர்-காரைக்குடி ரெயில் வழித்தடத்தில் உள்ள பட்டுக்கோட்டை வழியாக திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு போதிய அளவில் ரெயில்கள் இயக்கப்படவில்லை என பட்டுக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த பயணிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில் பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி, காரைக்குடி புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு தினசரி ரெயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லட்சுமி காந்தன், செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்டோர் தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

மின்மயமாக்க ஒப்புதல்

பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் முன்பதிவு மையம் தட்கல் புக்கிங் செய்வதற்கு வசதியாக அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் இயங்க வேண்டும். ரெயில் நிலைய நடைமேடையில் பயணிகள் அமர இருக்கைகள் அமைக்க வேண்டும். திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தை 2024-ம் ஆண்டுக்குள் மின் மயமாக்க ஒப்புதல் வழங்கியமைக்கும் சரக்கு முனைய பாதையில் கேட் அமைத்துக் கொடுத்த மைக்கும் பட்டுக்கோட்டையில் ரெயில்வே பாதுகாப்பு படை இயங்குவதற்கு ஏதுவாக அலுவலகம் திறக்க ஒப்புதல் வழங்கியதற்கும் ரெயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பட்டுக்கோட்டை வழியாக சென்னை எழும்பூர் செல்லக் கூடிய வகையில் தினசரி இரவு நேர ரெயில் இயக்க வேண்டும். காரைக்குடி- பட்டுக்கோட்டை-திருவாரூர் வழித்தடத்தில் காரைக்குடியில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு 12 மணிக்கு சென்று மீண்டும் மயிலாடுதுறையில் 1 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு மாலை 5 மணிக்கு செல்லும் வகையில் தினசரி ரெயில் இயக்க வேண்டும்.

தினசரி ரெயில்

விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக மதுரைக்கு இரு மார்க்கத்திலும் தினசரி ரெயில் இயக்க வேண்டும்.

பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதிகள் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் அடங்கியுள்ளதால் மேற்கண்ட இடங்களில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கு வசதியாக பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி, காரைக்குடி வழியாக திருச்சிக்கு தினசரி ரெயில் இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments