மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் கோரிக்கைகளை அலுவலா்கள் கவனமாகப் பரிசீலித்து நிதி நிலைக்கேற்ப விரைந்து செய்து கொடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவுறுத்தினாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட திட்டக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:
மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, சமுதாயக் கூடங்கள் கட்டுதல், பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல் போன்ற கோரிக்கைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் குறிப்பிடுபவற்றை, உரிய நிதி நிலைக்கேற்ப பரிசீலித்து விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
அடிப்படை வசதிகளை செய்துத் தருவதில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் மொ்சி ரம்யா.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரும், மாவட்டத் திட்டக் குழுத் தலைவருமான த. ஜெயலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பிரியா, புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.