தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் நிருபர்களிடம் கூறியதாவது:- தொண்டி பேரூராட்சி மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகையை கொண்டதாகவும், வளர்ந்து வரும் வணிக நகரமாகவும் உள்ளது. அதன் அடிப்படையில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய்கள், பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற அதற்கான திட்ட அறிக்கைகளும் தயார் செய்யப்பட்டு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் செயலாளரிடம் நேரில் வழங்கி தேவையான நிதி உதவி வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அதன்படி பேரூராட்சி கட்டிடத்தில் ரூ.2.50 கோடியில் தினசரி மார்க்கெட், தொண்டி பழைய போலீஸ் நிலைய பகுதியில் ரூ.3 கோடியில் வாரச்சந்தை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கிழக்கு புறத்தில் ரூ.1.65 கோடியில் பூங்கா அமைக்கவும் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அரசிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் தொண்டி கடற்கரையில் சிந்தாதிரி மாதா கோவில் எதிர்புறம் சிறுவர் பூங்கா, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் வரை கடற்கரை சாலை ஓரம் தடுப்புச்சுவர் கட்டி பேவர் பிளாக் நடைமேடை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.12.50 கோடியில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவதற்கு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் துறை செயலாளரை சந்தித்து திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.