கோபாலப்பட்டினம் VIP நகர் மற்றும் அவுலியா நகர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள இடத்தை JCB மூலம் தோண்டி தண்ணீர் வெளியேற்றம்




கோபாலப்பட்டினம் VIP நகர் மற்றும் அவுலியா நகர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள இடத்தை JCB மூலம் தோண்டி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

மேலும் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

சமீபத்தில் தான் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து    மழை பெய்து வருகிறது 
இதனால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியில் குளம் போன்று தண்ணீர் தேங்கியுள்ளது மழை காலங்களில் V.I.P நகர் குளம் போன்று தேங்கி நிற்கும் 

நேற்று 18.12.2023 திங்கட்கிழமை  நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டினம் VIP நகர் மற்றும் அவுலியா நகர் ஆகிய இடங்களில் ஊராட்சி சார்பில் மழைநீர் தேங்கியுள்ளதை ஜே சி பி மூலம் தோண்டி தண்ணீர் வெளியேற்றப்பட்டது








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments