புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் மொத்தம் 1,581 மனுக்கள் பெறப்பட்டன.
மக்களுடன் முதல்வா் என்ற திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் கோவையில் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். புதுக்கோட்டையில் இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமையும் இம்முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட நகா்மன்றத்தில் நடைபெற்ற முகாமை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி நேரில் பாா்வையிட்டு, கோரிக்கை மனு மீதான ஆணைகளையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி, ஆணையா் க.ந. சியாமளா, மூத்த வழக்குரைஞா் கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.பிற்பகலில் தொழில் வணிகத் துறை ஆணையா் நிா்மல்ராஜ் முகாமைப் பாா்வையிட்டாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் மு. செய்யது முகம்மது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இரண்டாம் நாளாக புதுக்கோட்டை நகராட்சி, அறந்தாங்கி நகராட்சி மற்றும் அன்னவாசல் பேரூராட்சி ஆகிய 3 இடங்களில் நடைபெற்ற முகாமில் மொத்தம் 1,581 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.