பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக மயிலாடுதுறை - மதுரை இடையே தினசரி ரயில் இயக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் பட்டுக்கோட்டை வட்டக்கிளையின் சார்பில் ஓய்வூதியர் தின விழா மற்றும் 75 வயது நிறைந்த ஓய்வூதியர்களுக்கு பாராட்டு விழா பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
விழாவிற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் கண.கல்யாணம் தலைமை வகித்தார்.துணைத்தலைவர் த.சந்திரமோகன் வரவேற்புரையாற்றினார். துணைத்தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்த பின்னர் மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.தீர்மானங்களை முன்மொழிந்து செயலாளர் இரா.அண்ணாதுரை பேசினார்.
75 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு பாராட்டுரை வழங்கி ஓய்வு பெற்ற ஐஏஸ் அதிகாரி திரு.வெ.அன்புச்செல்வன் சிறப்புரையாற்றினார்.வட்டப் பொருளாளர் சோம.ஆறுமுகம் நன்றி கூறினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானங்கள்
1. சென்னை எழும்பூர் இராமேஸ்வரம் தினசரி இரவு நேர விரைவு இரயிலை இருமுனைகளிலிருந்தும் திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி வழியாக இயக்க வேண்டும்
2.மயிலாடுதுறையில் இருந்து பட்டுக்கோட்டை காரைக்குடி வழியாக மதுரைக்கு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும்
3.பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி வழியாக திருச்சிக்கு தினசரி பயணிகள் ரயிலை இயக்க வேண்டும்
4.பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க நடவடிக்கை வேண்டும்
5.நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டுள்ள அரியலூர் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி பட்டுக்கோட்டை புதிய அகல ரயில் பாதைகளுக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.