புதுக்கோட்டைக்கு 28-ந் தேதி மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
தென்மாவட்டங்களில் கன மழை
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புயல் வெள்ள நிவாரண பணிகளுக்கு அரசு எந்திரத்தை முடுக்கிவிட்டு, அதன் மூலம் மக்களை காப்பாற்றுகிற பணியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டிருக்கிறார். 4 தென்மாவட்டங்களில் மிக கடுமையான மழை பெய்துள்ளது. கடந்த 100 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு கூட மழையாக இருந்தாலும், அதில் இருந்து மக்களை காப்பாற்றுகின்ற முயற்சியில் அமைச்சர்களையும், அரசு துறை அதிகாரிகளையும் அனுப்பி மீட்பு பணியிலும், மக்களை பாதுகாப்பதிலும் முதல்-அமைச்சர் மிகுந்த அக்கறை எடுத்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
கப்பற்படை, விமானப்படை, தரைப்படை ஆகியவை மத்திய அரசிடம் இருப்பதால் அவர்களை அழைத்து தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக கவர்னர் ஆலோசனை நடத்தினால் நடத்தட்டும். அதுபற்றி ஒன்றும் இல்லை.
‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகிற 28-ந் தேதி மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறுகிறீர்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய மழை வந்தாலும் அதனை எதிர்கொள்ளவும், மக்களை காப்பாற்றவும் மாவட்ட நிர்வாகமும், அரசும் தயாராக இருக்கிறது. மக்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லாமலும் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமில் கலந்து கொண்டு தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு உரிய ஆணைகளை அமைச்சர் ரகுபதி வழங்கினார். முன்னதாக முகாமில் நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், துணை தலைவர் லியாகத் அலி, நகராட்சி ஆணையர் சியாமளா, முன்னாள் அரசு வக்கீல் செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.