தில்லைவிளாகத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்லக்கோரி ஆர்ப்பாட்டம்




முத்துப்பேட்டை ஒன்றியம், உதயமார்தாண்டபுரம் ஊராட்சியில் தில்லைவிளாகம் ெரயில்வே நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் முன்பு தில்லைவிளாகம் ரயில் பயணிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரயில் பயணிகள் நல சங்க தலைவர் தாஹிர் தலைமை தாங்கினார். இதில் துணை தலைவர் சங்கரன், செயலாளர் கோவி.பழனிவேல், துணை செயலாளர் தனுஷ் பாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், அரவிந்தன், காசிநாதன், இலக்குவன், வர்த்தக சங்கத் தலைவர் பக்கிரிசாமி உள்பட 150-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 தில்லைவிளாகம் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ெரயில்களும் நின்று செல்ல வேண்டும். தரமற்ற சாலைகளை அகற்றி விட்டு புதிய சாலைகள் அமைத்து தர வேண்டும். ெரயில் நிலைய வடக்கு பகுதியில் பயணிகளுக்கு படிக்கட்டு அமைத்து தர வேண்டும். ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு ெரயில்வே போலீசாரும், முத்துப்பேட்டை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments