கோட்டைப்பட்டினம் வர்த்தக சங்கம் மற்றும் ஊராட்சி மன்றம் சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண பொருட்கள்




தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக பொதுமக்கள் பலர் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் வர்த்தக சங்கம் மற்றும் ஊராட்சி மன்றம் சார்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மக்களுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை மணமேல்குடி தாசில்தார் ஷேக் அப்துல்லா மற்றும் துணை தாசில்தார் முருகேசன் மற்றும் அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments