குரூப்-2, 2ஏ பதவிகள்...
தமிழ்நாடு அரசுத் துறைகளில் இருக்கும் பணியிடங்கள் காலியாகும் போது, அந்த இடங்களுக்கு தகுதியானவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு மூலம் நியமித்து வருகிறது.
அந்த வகையில் குரூப்-2 (நேர்முகத்தேர்வு பணியிடங்கள்), 2ஏ (நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்கள்) பதவிகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு (2022) பிப்ரவரி மாதம் 23-ந் தேதி வெளியிட்டது. அப்போது குரூப்-2-ல் 116 பணியிடங்களும், குரூப்-2ஏ-ல் 5 ஆயிரத்து 416 இடங்களும் என மொத்தம் 5 ஆயிரத்து 529 இடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத்தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்டு, அதே ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவு வெளியானது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதமும் நடத்தப்பட்டது.
12-ந் தேதி தேர்வு முடிவு
இதற்கான தேர்வு முடிவு வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தேர்வர்கள் எப்போதுதான் தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடுமோ என்ற விரக்திக்கே சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் சமீபத்தில் குரூப்-2, 2ஏ தேர்வு முடிவு வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்துக்கான விளக்கத்தை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டதோடு, தேர்வு முடிவு ஜனவரி மாதம் 12-ந் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவித்தது. அந்தவகையில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு 11 மாதங்களுக்கு பிறகு தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது.
இதற்கிடையில் குரூப்-2, 2ஏ தேர்வு பணியிடங்களில் இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிகரிக்கப்பட்ட இடங்கள் எவ்வளவு?
பணியிடங்கள் குறித்த அறிவிப்பு முதலில் வெளியானபோது, குரூப்-2, 2ஏ பதவிகளில் 5 ஆயிரத்து 529 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த பணியிடங்களில் சில பதவிகளில் இடங்கள் குறைக்கப்பட்டும், சிலவற்றில் கூடுதலாக இடங்கள் ஒதுக்கப்பட்டும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, குரூப்-2 பதவிகளில் 52 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், குரூப்-2ஏ பதவிகளில் ஏற்கனவே வெளியான அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்த இடங்களில் 78 இடங்கள் குறைக்கப்பட்டு, 675 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் குரூப்-2 பதவிகளில் 118 இடங்களுக்கும், குரூப்-2ஏ பதவிகளில் 6 ஆயிரத்து 10 இடங்களுக்கும் என மொத்தம் 6 ஆயிரத்து 128 இடங்கள் அடுத்த மாதம் (ஜனவரி) 12-ந் தேதி வெளியாகும் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் தேர்வர்களுக்கு காத்திருக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.