பி.எம்.கிசான் திட்டம் விவசாயிகள் நிதி உதவி பெற இகேஒய்சி மற்றும் ஆதார் இணைப்பு அவசியம்




பி.எம்.கிசான் திட்டம் விவசாயிகள் நிதி உதவி பெற இகேஒய்சி மற்றும் ஆதார் இணைப்பு அவசியம் 
புதுக்கோட்டை மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டம் விவசாயிகள் தொடர்ந்து நிதி உதவி பெற கே.ஒய்.சி (KYC) மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு அவசியம் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர்  மா. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

பி.எம்.கிசான் திட்டம் விவசாயிகள் நிதி உதவி பெற இகேஒய்சி மற்றும் ஆதார் இணைப்பு அவசியம் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டம் விவசாயிகள் தொடர்ந்து நிதி உதவி பெற கே.ஒய்.சி (KYC) மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு அவசியம் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் திரு. மா. பெரியசாமி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் இடுபொருட்கள் வாங்க 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ 8000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தில் 15 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது.
15வது தவணை தொகை கீழ்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்த விவசாயிகளுக்கு மட்டுமே முதலாவதாக ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்தல் இகேஒய்சி (eKYC)
இதன்படி ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்த விவசாயிகள் பிஎம்.கிசான் திட்ட வலைதளத்தில் (www.pmkisan.gov.in) ஆதார் எண் விவரங்கள் குறித்து ரகசிய குறியீட்டு எண் (OTP) மூலம் சரிபார்க்கலாம்.
ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ. சேவை மையத்தை அணுகி பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் ஆதார் எண் விவரம் மற்றும் விரல்கைரேகையை பதிவு செய்து சரிபார்க்கலாம் அல்லது பிஎம்.கிசான் செயலி மூலமாக அடையாளம் கொண்டு இ.கே.ஒய்.சி செய்யலாம்.
இரண்டாவதாக, விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மேலும் நேரடி பணபரிவர்த்தனை முறைக்கு (DBT Mode) வங்கிக் கணக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியாத விவசாயிகள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று புதிய சேமிப்பு கணக்கினை தொடங்கி பயன்பெறலாம்.

விஜயகாந்த் நடிப்பில் வெளியான சிறந்த 10 படங்கள் தொகுப்பு!


மேற்கூறிய நிபந்தனைகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக மத்திய அரசு 01.12.2023 முதல் 15.01.2024 வரை பி.எம்.கிசான் செறிவூட்டல் முனைப்பு இயக்கத்தை தொடங்கி கிராமங்கள்தோறும் ஓர் கிராம பொறுப்பு அலுவலரை நியமித்துள்ளது. விவசாயிகள், பொறுப்பு அலுவலர்களை அணுகி தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் திட்டத்தில் இன்னும் இணையாத விவசாயிகள் புதிதாக பதிவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. விவசாயிகள் தங்கள் கிராமத்தின் பொறுப்பு அலுவலரை தெரிந்து கொள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளவும். தகுதியான விவசாயிகள் சம்மந்தப்பட்ட பொறுப்பு அலுவலரை அணுகி தவணை தொகை ஏன் வரவு வைக்கப்படவில்லை என்ற காரணத்தை அறிந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments