மீமிசல் அருகே R.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது




அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் 26 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ஆர்.புதுப்பட்டிணம் முஸ்லிம் ஜமாத் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மீமிசல் இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் 30/12/2023 நடைபெற்றது 
இந்த நிகழ்ச்சிக்கு அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற தலைவர் முஹம்மது நலிம் தலைமை தாங்கினார்

ஆர்.புதுப்பட்டிணம் முஸ்லிம் ஜமாத் தலைவர் பிரியம் J.அப்துல் காதர் அவர்கள் முன்னிலை வைகித்தார்  அல் அமீன் மன்ற பொருளாளர் S.ஜாபிர்கான் கிராத் ஓதி ஆரம்பம் செய்தார் அல் அமீன் தலைவர் R முகமது நலீம் வரவேற்புரை நிகழ்த்தினார்

அல் அமீன் ஆலோசனை குழு உறுப்பினர்  O.M.S.நூர் முஹம்மது அவர்கள் பிறர் நலம் நாடும் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்  அறந்தாங்கி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இரத்த தானத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார் 

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மீமிசல் மருத்துவர்  அரவிந்த் மனிதநேயமே மனித  மாண்புகளை உயர்த்தும் என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றினார் அல் அமீன் மன்ற துணைத் தலைவர் A.சபிக் அஹமது அவர்கள் நன்றி உரை கூறினார்

அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் முன்னாள் தலைவர் A.கலந்தர்  பாட்ஷா அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார் இந்த ரத்ததான முகாமில் 31 இரத்ததான கொடையாளர்கள் பங்கு கொண்டு இரத்தக்கொடை அளித்தனர்


தகவல் 
 அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் பேரவை
 ஆர்.புதுப்பட்டிணம்
















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments