அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.
பள்ளிகள் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கடந்த 23-ந் தேதி முதல் விடுமுறை விடப்பட்டன. இந்த விடுமுறை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் விடுமுறைக்கு பின் நேற்று முதல் பள்ளிகள் வழக்கம் போல திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 3-ம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கினர்.
முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு
இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா ஆய்வு மேற்கொண்டார். கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டதை அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அன்னவாசல்
இந்தநிலையில் அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 3-ம் பருவத்திற்கான பாடப் புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் முருகன் வழங்கினார்.
இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.