கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுத இருக்கின்ற மாணவர்களின் கல்வித்திறன் குறித்து மாவட்ட கலெக்டர் மொ்சிரம்யா ஆய்வு செய்தார். மேலும் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கோவிலூரில் உள்ள குழந்தைகள் மையத்தை ஆய்வு செய்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டு ஆய்வு செய்தார். கோமாபுரத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தும் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கண்டார். மருத்துவமனை சுற்றுச்சுவரின் அருகில் உள்ள தனி நபர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார் அதன்படி கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் ராமசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்டோர் அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றினார்கள். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.