கடலோர மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்




மணமேல்குடியில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவ சங்க தலைவர்கள் முருகானந்தம், செல்லத்துரை ஆகியோர் தலைமை தாங்கினர். ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய நாட்டுப்படகு மீனவ சங்க தலைவர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய பகுதி விசைப்படகு மீனவர்கள் பாக்சல சந்தி என்ற இந்த 5 மாவட்ட கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதிக்கு வந்து தங்கு கடல் மீன்பிடி மூலம் நாட்டுப்படகு எல்கை வரை வந்து மீன்களை அரிவலை பயன்படுத்தி பிடித்து செல்வதால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது. இதற்கு அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடலில் 5 நாட்டிகல் உள்ளே பாக்சல சந்தி கடல் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்தால் நாட்டுப்படகு மீனவர்கள் குழு மிக பெரிய போராட்டத்தை நடத்தும். கடலோர மீனவர்களை தமிழக அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இரவில் லைட் வைத்து மீன்பிடிக்கும் மீனவர்களால் கடல்வளம் பாதிக்கின்றது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்களுக்கு கடலில் ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்க, விரைந்து வந்து காப்பாற்ற, கண்காணிக்க மீன்வளத்துறைக்கு அதிநவீன விரைவு ரோந்து படகு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 5 மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments