அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதேபோல், மருத்துவ காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகள், போதைக்காகப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்கெனவே கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், நேற்று இதுகுறித்து மீண்டும் ஒரு முறை சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட, 391 வகையான புகையிலை சார்ந்த பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் விற்பனை தொடர்பாக கடந்த டிசம்பர் 11ம் தேதி முதல் 26ம் தேதி வரை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 993 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அந்த கடைகளுக்கு 37.70 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காவல்துறை ஆய்வு நடத்தி 1,400 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். இதற்கு முன்னர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகும் விற்பனை செய்தால் அந்த கடைகளுக்குச் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், தற்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உடனடியாக அந்த கடைகளுக்கு, தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதேபோல், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், மருந்துகளை விற்கும் மருந்தகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கொரியர் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து போதை மாத்திரைகள் கடத்தி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.