மணமேல்குடி ஒன்றிய பகுதியில் 32 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும் என்று ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார்.
ஒன்றியக்குழு கூட்டம்
மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சீனியார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டது.
கூட்டத்தில் தலைவர் பேசுகையில், மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக 32 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுமார் ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். கிராமப்புற சாலை வசதி முற்றிலும் சீர் செய்யப்படும், என்றார்.
கலந்து கொண்டவர்கள்
மேலும் இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், அரசமணி மற்றும் அனைத்து கவுன்சிலர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.