மணமேல்குடி பகுதியில் 32 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றியக்குழு தலைவர் தகவல்




மணமேல்குடி ஒன்றிய பகுதியில் 32 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும் என்று ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார்.

ஒன்றியக்குழு கூட்டம்

மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சீனியார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டது.

கூட்டத்தில் தலைவர் பேசுகையில், மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக 32 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுமார் ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். கிராமப்புற சாலை வசதி முற்றிலும் சீர் செய்யப்படும், என்றார்.

கலந்து கொண்டவர்கள்

மேலும் இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், அரசமணி மற்றும் அனைத்து கவுன்சிலர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments