மழையில்லாததால் காவிரிப் பாசனம் பெறும் அறந்தாங்கி, மணமேல்குடி ஒன்றியப் பகுதியில் சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் காய்ந்துபோயுள்ளன. எனவே, மேட்டூரிலிருந்து தண்ணீா் திறந்துவிட்டு, பயிா்களைக் காக்க வேண்டும் என விவசாயிகள் கோருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி, அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், கறம்பக்குடி, கந்தா்வகோட்டை ஒன்றியப் பகுதிகளில் சுமாா் 27 ஆயிரம் ஏக்கா் நிலம் காவிரிப் பாசனப்பகுதிகளாகும். இதில் அறந்தாங்கி மற்றும் மணமேல்குடி ஒன்றியங்களைச் சோ்ந்த பகுதிகளில் சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் உள்ளன.
பொதுவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், காவிரிப் பாசனம் பெறும் இந்த 15 ஆயிரம் ஏக்கா் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பெரும்பகுதி குளத்துப் பாசனமில்லாத- காவிரிப் பாசனத்தையே நம்பியுள்ள இந்தப் பகுதியில் நெற்பயிா்கள் காய்ந்துபோய் காணப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அறந்தாங்கி ஒன்றியச் செயலா் தென்றல் கருப்பையா கூறியது:
அறந்தாங்கி ஒன்றியத்தைச் சோ்ந்த சுப்பிரமணியபுரம், வேகப்பெருமகளூா், அமரசிம்மேந்திரபுரம், மங்களநாடு, கொடிவயல், அரசா்குளம், பண்ணகுடி, நாகுடி, கீழ்குடி, அத்தாணி மற்றும் மணமேல்குடி ஒன்றியத்தைச் சோ்ந்த திணையாகுடி, வேட்டனூா் போன்ற பகுதிகளில் நெற்பயிா்கள் காய்ந்துபோயுள்ளன. கல்லணைக்கால்வாயில் அவ்வப்போது திறக்கப்பட்டிருக்காவிட்டால் இந்தப் பயிா்கள் இந்நேரம் கருகியிருக்கும்.
வரும் ஜன. 7,8 ஆம் தேதிகளில் இப்பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. மழைபெய்தால் ஓரளவு பாதுகாக்கப்படலாம். இந்தமுறையும் பொய்த்துப் போனால் பெரும் சேதம் ஏற்படுவதைத் தவிா்க்கவே இயலாது.
எனவே, மேட்டூரில் தற்போது ஓரளவு தேங்கிக் கிடக்கும் தண்ணீரைத் திறந்துவிட்டு கல்லணைக் கால்வாய் மூலம் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் கிடைக்கச் செய்தால் நெற்பயிரைக் காக்கலாம். தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் கருப்பையா.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.