அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணி




ஆவுடையார்கோவிலை அடுத்துள்ள பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் திட்ட அலுவலர் ரமேஷ் தலைமையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். தூய்மை பணியை நகர்மன்ற தலைவர் ரா.ஆனந்த் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், தேவையற்ற செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்து தூய்மை பணி மேற்கொண்டனர். இதில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சேகர், நகர்மன்ற உறுப்பினர் துளசிராமன், கல்லூரி பேராசிரியர்கள் கார்த்திகேயன், அலெக்ஸ்சான்ட்ரியா, செவிலியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments