பொங்கல் சிறப்பு பேருந்துகள் எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் செல்லும் இதோ முழு லிஸ்ட்




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், 2024 - பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 19,484 பேருந்துகள் இயக்கம் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்களின் தகவல் 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், 2024-ஆம் ஆண்டு வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது. மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்களின் தலைமையில், இன்று (08/01/2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையை சார்ந்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.க. பணீந்திரரெட்டி, இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை ஆணையர், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 

பொங்கல் திருநாளை முன்னிட்டு, வரும் 12/01/2024 முதல் 14/01/2024 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,706 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 11,006 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 19,484 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, வரும் 16/01/2024 முதல் 18/01/2024 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,830 சிறப்புப் பேருந்துகளும் மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 11,130 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,459 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,589 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 

பொங்கல் திருநாள் - சிறப்பு பேருந்துகள் இயக்கம் சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள்

கலைஞர் கருணாநிதி நகர் மா.போ.கழக பேருந்து நிலையத்தில் இருந்து.கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து. (MEPZ) திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து TNSTC வழித்தட பேருந்துகள் (அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நீங்கலாக).

வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து.   தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகள்.

பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம் (பூவிருந்தவல்லி மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை அருகில்) பூவிருந்தவல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர். தர்மபுரி. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம். செய்யாறு, ஓசூர் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள். 

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து.

இதர ஊர்களுக்கு செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி கோட்டத்தை சார்ந்த பேருந்துகள் கீழ்கண்ட தட பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். 

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, கரூர், மதுரை. திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், 

போரூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி. நெய்வேலி, வடலூர், சிதம்பரம். காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் 

திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, செயங்கொண்டம், காரைக்குடி. புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர். பொள்ளாச்சி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துத் கழகத்தை சார்ந்த பேருந்துகள் 

பெங்களுர் மற்றும் ECR மார்க்கமாக இயக்கப்படும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி. வேளாங்கண்ணி.

கலைஞர் பேருந்து நூற்றாண்டு தேசிய நெடுஞ்சாலை NH-45 வழியாக செல்லும் அரசு முனையம் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த கீழ்கண்ட (KCBT), கிளாம்பாக்கம் தடங்கள்:

திருச்சி, தஞ்சாவூர். கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர். செங்கோட்டை, நாகர்கோவில், தூத்துக்குடி. மார்த்தாண்டம். திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல். திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம். சேலம், கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளம்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு மட்டுமே கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

மற்ற போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்த / முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மேற்குறிப்பிட்ட 5 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.



தேசிய நெடுஞ்சாலை NH-45 வழியாக இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் புறப்பாடு விவரம்:

30.12.2023-க்கு முன்பு முன்பதிவின் போது அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில் கோயம்பேடு. தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில்இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாக இயக்கும் முன்பதிவு செய்திருக்கும் பயணிகள்அதற்கு பதிலாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம்சென்றடைந்து, அங்கு தாங்கள் கோயம்பேட்டில் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பிற அரசு போக்குவரத்துக் கழகங்களான விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களும் பிற முன்பதிவு செய்யாத பயணிகளும் விழுப்புரம், திருச்சி மார்க்கமாக பயணிக்க கோயம்பேட்டிற்கு வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

வழித்தட மாற்றம் கார் மற்றும் இதர வாகனங்கள் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து (OMR) திருப்போரூர் செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

முன்பதிவு வசதி முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

பயணிகளின் வசதிக்காக 24x7 கட்டுப்பாட்டு அறை

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் செய்தால் புகார் செய்ய 1800 425 6151 (Toll Free Number) , 24749002-044 044-26280445, 044-26281611 எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.

மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு வசதியினை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள்

பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 5 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments