திருவாடானை யூனியன் கலியநகரி ஊராட்சி பாசிப்பட்டினத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பில் பயணிகளுக்காக புதிய நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடை திறப்பு விழா திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார் தலைமையில் நடைபெற்றது. திருவாடானை தி.மு.க.தெற்கு ஒன்றிய செயலாளர் ஓடவயல் ராஜாராம் முன்னிலை வகித்தார். அனைவரையும் கலியநகரி ஊராட்சி மன்ற தலைவர் உம்மு சலீமா நூருல் அமீன் வரவேற்றார்.
விழாவில் புதிய நிழற்குடை கட்டிடத்தை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டை ராஜ், ஒன்றிய கவுன்சிலர் சிவ சங்கீதா ராஜா ராம், தி.மு.க. தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் அன்வர்சதாத், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அமீர்கான், கலிய நகரி முன்னாள் ஊராட்சி தலைவர் அபூபக்கர், ஊராட்சி துணைத்தலைவர் ராமவள்ளி, தி.மு.க.தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராவுத்தர், மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் அப்துல் ஜப்பார், திருவாடானை ஒன்றிய செயலாளர் ராவுத்தர் நைனா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கதியதுல்லாஹ், ராமநாதபுரம் நகர தலைவர் காசிம் பாசி பட்டினம் ஜமாத்தார்கள், வன்னியர் படையாட்சி சமூகத்தினர் சுற்றுவட்டார கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.