ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்த பி.வி.பட்டினம் கிராமத்தின் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் நேற்று இரவு 7 மணி அளவில் பட்டுக்கோட்டையில் இருந்து ஏர்வாடி நோக்கி அரசு பஸ் ஒன்று 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பஸ்சை ராமநாதபுரம் கண்ணகி நகரைச் சேர்ந்த கண்ணன் (வயது 58) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது தொண்டியிலிருந்து மினி சரக்கு வாகனம் ஒன்று எஸ்.பி. பட்டினம் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் மாடு குறுக்கே சென்றதால் சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவர் பொன்னரசு (23) மாட்டின் மீது மோதிவிடாமல் இருக்க பிரேக் பிடித்து உள்ளார்.. ஆனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடி எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 25 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த த.மு.மு.க. மற்றும் தொண்டி சமூக நல அறக்கட்டளை ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சரக்கு வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவர் தொண்டி அருகே உள்ள வேலங்குடியைச் சேர்ந்த பொன்னரசுக்கு கால் முறிவு ஏற்பட்டது. அதேபோல் ராமேசுவரத்தைச் சேர்ந்த காமாட்சி(75) என்ற மூதாட்டிக்கு கால் முறிவு ஏற்பட்டது.அரசு பஸ் கண்டக்டரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (52). நம்புதாளையைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (40) அவரது மனைவி கவுதமி (35), தொண்டியை சேர்ந்த சபா(15) உள்பட 25 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.