மீமிசல் அருகே கார்களில் கடத்திய 140 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 5 பேரை கைது செய்தனர்.
140 கிலோ கஞ்சா பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பாலக்குடியில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், 2 கார்களில் பண்டல் பண்டலாக பார்சல் இருந்துள்ளது. இதையடுத்து ேபாலீசார் பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 140 கிேலா கஞ்சா மற்றும் 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
5 பேர் கைது
மேலும் கஞ்சா கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 27) கஸ்தூரி ரங்கன் (25), தேவதாசன் (32), திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுஜித்குமார் (25) பழனிச்செல்வம் (38) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு கஞ்சா கடத்தி வந்ததாகவும், இங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்ததாகவும் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 5 பேரையும், ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.