கோபாலப்பட்டிணத்தில் சாலையை சூழ்ந்த குப்பை! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!!




கோபாலப்பட்டிணத்தில் சாலையை சூழ்ந்த குப்பையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையர்கோவில் ஒன்றியம், நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் மலை போல் குப்பைகள் ஊர் முழுவதும் குவிந்து கிடக்கிறது. 

இந்நிலையில் மீமிசலில் இருந்து மில் ரோடு வழியாக கோபாலப்பட்டிணத்திற்கு வரும் சாலையில் பாப்புலர் பள்ளிக்கூடம் அருகே பல மாதங்களாக குப்பைகள் அல்லப்படாமல் மலை போல் குவிந்து கிடந்தது. இதனிடையில் மலை போல் குவிந்து கிடந்த குப்பைகள் நேற்று இரவு சில சாலையை ஆக்கிரமித்து இருந்த நிலையில் இன்று காலையில் முழு சாலையையும் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் இந்த வழியாக பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் மற்றும் மீமிசல் செல்லக் கூடிய வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே பள்ளிக்கூடம் அருகே சாலையை ஆக்கிரமித்து உள்ள குப்பைகளையும், கோபாலப்பட்டிணம் முழுவதும் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments