கோபாலப்பட்டிணத்தில் சாலையை சூழ்ந்த குப்பையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையர்கோவில் ஒன்றியம், நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் மலை போல் குப்பைகள் ஊர் முழுவதும் குவிந்து கிடக்கிறது.
இந்நிலையில் மீமிசலில் இருந்து மில் ரோடு வழியாக கோபாலப்பட்டிணத்திற்கு வரும் சாலையில் பாப்புலர் பள்ளிக்கூடம் அருகே பல மாதங்களாக குப்பைகள் அல்லப்படாமல் மலை போல் குவிந்து கிடந்தது. இதனிடையில் மலை போல் குவிந்து கிடந்த குப்பைகள் நேற்று இரவு சில சாலையை ஆக்கிரமித்து இருந்த நிலையில் இன்று காலையில் முழு சாலையையும் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் இந்த வழியாக பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் மற்றும் மீமிசல் செல்லக் கூடிய வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே பள்ளிக்கூடம் அருகே சாலையை ஆக்கிரமித்து உள்ள குப்பைகளையும், கோபாலப்பட்டிணம் முழுவதும் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.